2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முச்சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது ; 9 மாணவர்கள் காயம்

Super User   / 2010 செப்டெம்பர் 29 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எவ்.எம். தாஹிர்)

பதுளையில் இன்று காலைமுச்சக்கரவாகனமொன்று குடைசாய்ந்ததால் அதில் பயணம் செய்த பாடசாலை மாணவர்கள் 9 பேர் காயமடைந்தனர்.

பதுளை - பண்டாரவளை வீதியில் போகாமடித்த எனும் இடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வாகனத்திற்கு குறுக்காக நாயொன்று ஓடியபோது, அதில் மோதாமலிருக்க சாரதி முயற்சித்தபோது அவ்வாகனம் நிலைதடுமாறி சரிந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த மாணவர்கள் பதுளை  வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச்   சென்றுகொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக  பதுளை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .