2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘கட்டுகஸ்தோட்டை மருந்தகங்களில் ஐஸ் போதைப் ​பொருள் விற்பனை’

Editorial   / 2019 பெப்ரவரி 13 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, கட்டுகஸ்தோட்டையிலுள்ள சில மருந்தகங்களில், ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார். 

ஹிக்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர்,  

கட்டுகஸ்தோட்டை நகரில், போதைப்பொருள் வர்த்தகம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இவ்வாறான போதைப்பொருள் வர்த்தகத்தைத் தடுப்பதற்காக, நகரம் முழுவதும், சி.சி.டீ.வி கமெராக்களைப் பொருத்தும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  

எதிர்வரும் நாள்களில், கட்டுகஸ்தோட்டை நகரில், போதைப்பொருள் வர்த்தகத்தைத் தடுப்பதற்காக, பொலிஸ் விசேட படையணியினர் க​டமையில் ஈடுபடுத்தபடுவர் என்று கூறிய அவர், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட இளம்வயதினர், போதைப்பொருள்களைப் பாவிக்காது இருக்க,  பெற்றோர் கவனமாகச் செயற்படுவது அத்தியாவசியமானது, என்றும் அவர் வலியுறுத்தினார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .