2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காசல்ரீயை அண்மித்துள்ள மக்களுக்கு எச்சரிக்கை

Editorial   / 2017 டிசெம்பர் 01 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

காசல்ரீ நீர்தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளமையால் அதனை அண்மித்துள்ள பிரதேச மக்களை, மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு லக்சபான மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழையால், காசல்ரீ நீர்தேக்கத்துக்கு நீர் வழங்கும்  கெசல்கமுவ ஓயா மற்றும் ஹட்டன் ஓயா ஆறு பெருக்கெடுத்துள்ளது.

காசல்ரீ நீர்தேக்கத்தின் நீர்மட்டம்,  இன்னும் 4 அடிகள் மாத்திரமே உச்சமட்டத்தை அடைய உள்ளமையால்  காரையோர மக்களும் காசல்ரீ ஓயா பகுதிகளைச் சேர்ந்த ஒஸ்போன், நோட்டன் ஆத்தடி, கிளவட்டன் பிரதேச மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .