2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

குளவி கொட்டு; 20 பேர் பாதிப்பு

Kogilavani   / 2018 ஜூலை 02 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மஸ்கெலிய குயின்லென்ட் தோட்டத்தைச் சேர்ந்த 21 தொழிலாளர்கள், குளவிக் கொட்டுக்கு உள்ளான நிலையில், மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில், இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களே, இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இவர்களில் 16 பெண்களும் 4 ஆண்களும் உள்ளடங்குகின்றனர் எனத் தோட்ட நிர்வகம் தெரிவித்துள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில்,  18 பேர்  சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர் என்றும், மூவர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X