2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கூட்டணிக்கும் நவீனுக்குமான சந்திப்பு இன்று

Nirosh   / 2019 பெப்ரவரி 12 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் முற்போக்குக் கூட்டணி கோரி வரும் 140 ரூபாய் ஊக்குவிப்புத் தொகை தொடர்பில், பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்கவுக்கும் கூட்டணியின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று (12) நடைபெறவுள்ளது.  

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாயை ஊக்குவிப்புத் தொகையாக வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதோடு, அதை வருடத்துக்கு மாத்திரம் வழங்க முடியுமெனவும் அறிவித்திருந்தது.  

இந்நிலையில், இது தொடர்பில் இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்படுமெனவும் இந்தக் கூட்டத்தில் எட்டப்படும் முடிவுகளைத் தொடர்ந்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, கூட்டணி சந்திக்கும் எனவும் அறிய முடிகின்றது. 

மேலும், இன்று (12) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில், கூட்டணியின் அமைச்சர்கள், ஊக்குவிப்புத் தொகை தொடர்பில் தங்களது அதிருப்தியை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .