2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொலைசெய்யப்பட்ட உதவி பொலிஸ் பரிசோதகருக்கு பதவி உயர்வு

Editorial   / 2018 ஜனவரி 04 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட்  ஆஸிக்

 

கண்டி அங்கும்புரை பொலிஸ் நிலையத்தில் சேவைபுறிந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட உதவி பொலிஸ் பரிசோதகர் டீ.ஆர்.எம்.மத்தும பண்டார (வயது 57),  பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வுபெற்றுள்ளார்.

மேற்படி பொலிஸ் பரிசோதகர், கடந்த ஒட்டோபர் மாதம் 30ஆம் திகதி, கடமைமுடிந்து விடு திரும்பும்போது, வழியில் இவரை இடமறித்த சிலர், கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மேற்படி பரிசோதகர், கடந்த மூன்று மாதங்களாக கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், புதன்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது இறுதி கிரியைகள், அலவத்துகொடை பொதுமயானத்தில் புதன்கிழமை மாலை இடம்பெற்றது.

இந்நிலையில், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரையின் பேரில் மேற்படி பொலிஸ் அதிகாரி பதவி உயர்வுபெற்றுள்ளார்.  இவரது இருதி கிரியைகள் பூரண பொலிஸ் மரியாதையுடன் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X