2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’சிறுநீரக சிகிச்சைப் பிரிவை திறக்கவும்’

Editorial   / 2018 மே 15 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஷ் கீர்த்திரத்ன

மாத்தளை, வில்கமுவ ஹெட்டிபொல ஆதார வைத்தியசாலையின் சிறுநீரக சிகிச்சைப் பிரிவு நிர்மாணிக்கப்பட்டு ஓர் ஆண்டு கடந்துள்ள போதிலும், அப்பிரிவு மூடப்பட்ட நிலையிலேயே இருப்பதாக, வில்கமுவ பிரதேச செயலாளர் ஏ.ஜீ.தென்னகோன், மாத்தளை மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தின்போது, அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.

மாத்தளை மாவட்டத்தில், 2,160 சிறுநீரக நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனரென்றும், இவர்களில் 1,505 பேர் வில்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென்றும் சுட்டிக்காட்டிய அவர், எனவே, இம்மக்களின் நலன்கருதி, வைத்தியசாலையின் சிறுநீரக சிகிச்சைப் பிரிவைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .