2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பதுளை மரக்கறிச் சந்தை வியாபாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்

Kogilavani   / 2018 பெப்ரவரி 26 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீதியோர மரக்கறி வியாபாரிகளால், தங்களது வியாபார நடவடிக்கைள் பாதிக்கப்படுகின்றன எனத் தெரிவித்து, பதுளை மாநகர சபைக்கு உட்பட்ட மரக்கறிச் சந்தை வியாபாரிகள், இன்று (26), கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாம், பதுளை மாநகர சபைக்கு வரிப்பணம் செலுத்தி வியாபாரத்தில் ஈடுபடுகின்ற போதும், வீதியோர வியாபாரிகள், பாதையோரங்களில் முறையற்ற வகையில் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என, ஆர்ப்பாட்டக் காரர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

எனவே, இதற்கெதிரான நடவடிக்கைகளை பதுளை மாநகர சபை எடுக்க வேண்டும் என்று, ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .