2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

பல குற்றங்களுடன் தொடர்புடையவர் சிக்கினார்

Kogilavani   / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா                         

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்ற பெயரில், பதுளை பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நபர், கிந்தலெயில் உள்ள கடையொன்றில் திருட்டில் ஈடுபட்டுகொண்டிருந்த போது, எல்ல பொலிஸாரினால், திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டார்.

மேற்படி நபர், திருட்டு மற்றும் கொள்ளை குற்றச்சாட்டுக்களின் பேரில் 28 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து வந்தவரென்றும், இவர், கடந்த 1971ஆம் ஆண்டு,   பொலிஸ் திணைக்களத்தினால், ஐ.ஆர்.சி   பட்டியலிலும் உள்ளவாங்கப்பட்டிருந்ததாகவும், எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.  

வீடுடைப்பு, கடை உடைப்பு, கொள்ளை, வழிபறி போன்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் இந்நபர் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .