2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

Editorial   / 2017 ஒக்டோபர் 13 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்- 

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலிபட தோட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று நள்ளிரவு(12) மணியளவில்  இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட மின்சார இயந்திரங்கள் உட்பட,  பல உபகரணங்களும்  கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை  அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X