2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முச்சக்கரவண்டி சாரதிகளின் மே தின ஊர்வலம்

Editorial   / 2018 மே 07 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாண முச்சக்கர வண்டி சாரதிகளது மேதின ஊர்வலமும், கூட்டமும் இன்று (07) கண்டியில் இடம் பெற்றது. காலை கண்டி பேராதனை வீதிக்கு ஒன்று சேர்ந்த மத்திய மாகாணத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதிகள், அங்கிருந்து ஊர்வலமாகக் கண்டி நகரை வந்தடைந்தனர்.

இதன்போது, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கண்டி முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் பிரியதர்ஷன ரூபசிங்க, தற்போதைய அரசு, முச்சக்கர வண்டி தொழிலை செய்ய முடியாது செய்துள்ளதாகவும், புதிதாக மீற்றர் முறை அறிமுகம் செய்ய முயற்சிப்பதாகவும், அது மத்திய மாகாணத்துக்கு எவ் வகையிலும் பொருந்தாது என்றும், அதனை நிறுத்தாவிட்டால், பாரிய நடவடிக்கையில் இறங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .