2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மோதலில் ஈடுபட்டவர்களுக்கு எச்சரிக்கை

Editorial   / 2018 ஜனவரி 08 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா

தலவாக்கலை நகரில், சனிக்கிழமை இரவு மோதலில் ஈடுபட்ட இரு குழுவினரும், கடுமையான எச்சரிக்கையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனரென, தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை புதிய நகர சபை விளையாட்டு மைதானத்தில், சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இசை நிகழ்வொன்றின் போது, மேற்படி இரு குழுவினரும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.   

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்களுக்கும் சுயட்சை குழு ஒன்றின் ஆதரவாளர்களுக்கும் இடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இவர்களை பொலிஸார், நுவரெலியா மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் ஒப்படைத்ததையடுத்து, தெரிவத்தாட்சி அதிகாரி, இரு தரப்பினரையும் கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .