2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வருடாந்தப் பொதுக்கூட்டம்

Kogilavani   / 2018 மார்ச் 13 , பி.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரூ   

12 பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு இடையிலான வருடாந்தப் பொதுக்கூட்டம், நானுஓயா -  ரதெல்ல விளையாட்டுக் கழகத்தின் கேட்போர் கூடத்தில், அண்மையில் நடைபெற்றது.   

அகலவத்த, அக்கரப்பத்தனை, களனிவெலி, மஸ்கெலியா, தலவாக்கலை, அம்புகஸ்தென்ன, உடபுஸ்ஸல்லாவை, கேகாலை, மத்துரட்ட, வட்டவளை, டீ.ஆர்.ஐ மற்றும் ஹட்டன் ஆகிய பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டமே, இதன்போது நடைபெற்றது.   

பீட்று தோட்டப் பொது முகாமையாளரும் மனிதவள அபிவிருத்தி நிறுவன பணிப்பாளருமான அநுர சேனாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மேற்படி நிறுவனங்களின் கீழ் பணிப்புரியும் 180 தோட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.   

இந்தக் கூட்டத்தின் அதிதிகளாக, நுவரெலியா மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன கலப்பதி, பெருந்தோட்ட நிறுவனங்களின் மேலதிகச் செயலாளர் யஜித் டீ.சில்வா, பெருந்தோட்டச் சம்மேளனத்தின் உதவிச் செயலாளர் வருண விஜேகோன், நுவரெலியா மாவட்டப் பெருந்தோட்டச் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .