2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

விபத்தில் மூவர் காயம்

Editorial   / 2018 மார்ச் 12 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ரஞ்சித் ராஜபக்ஷ 

 

பத்தனை- குயின்ஸ்பெரி தோட்டத்திலிருந்து, நுவரெலியாவுக்கு சேதனப் பசளைகளை (சாணம்) ஏற்றிச்சென்ற டிப்பர் ரக வாகனம்,  தலவாக்கலை - நாவலப்பிட்டி பிரதான வீதி, குயின்ஸ்பெரி தோட்டத்தில், குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவித்த பொலிஸார், இவ்விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இவ்விபத்தில் படுகாயமடைந்த மூவரும் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.

டிப்பர் ரக வாகமானது, வேகக் கட்டுப்பாட்டை இழந்து  விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்த பொலிஸார், இவ்விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X