2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நாவலப்பிட்டி இம்புலம்பிட்டி பகுதியில் 12 அடி நீளமான மலைப்பாம்பு

Kogilavani   / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நாவலப்பிட்டி இம்புல் பிட்டிய மேற்பிரிவு தோட்டத்தில் 12 அடி நீளமான மலைப்பாம்பொன்றினை தோட்ட மக்கள் நேற்று பிடித்துள்ளனர்.

தோட்டத்திற்கு அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு விறகு சேகரிக்கச்சென்ற இளைஞர் ஒருவரே இம்மலைப்பாம்பை பிடித்து தோட்டத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இம் மலைப்பாம்பினை வன இலாகா பிரிவினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளில் தோட்ட மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக இம்புல் பிட்டிய காட்டுப்பகுதியில் மலைப்பாம்புகளின் ஊடுருவல் அதிகமாகியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X