2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

லொறி பாதையை விட்டு விலகி விபத்து; 4 பேர் காயம்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 02 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.கமலி, எஸ்.சுவர்ணஸ்ரீ)

ஹட்டன், வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்  லொறியொன்று வீதியை விட்டு விலகிச்சென்று விபத்திற்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பாதுக்கையிலிருந்து சிவனொலிபாத மலைக்கு பயணித்த லொறியே வீதியை விட்டு விலகிச் சென்று சுமார் 20 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இவ்விபத்தில் லொறியில் பயணித்தவர்களே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த 4 பேரும் உடனடியாக வட்டவளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இவர்களில் இருவர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வட்டவளை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

லொறியின் சாரதி தப்பியோடியுள்ளதாக தெரிவித்த வட்டவளை பொலிஸார், இவ்விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .