2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எசல பெரஹராவின் நீர்வெட்டு நிகழ்வில் பெருந்திரளான இந்துக்கள்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி ஸ்ரீதலதா மாளிகையின் எசல பெரஹராவில் கடைசி தினமான இன்று பகல் பெரஹராவில் இந்து மக்களின் பங்களிப்பு மிக உயர்ந்த மட்டத்தில் காணப்பட்டது.இந்நிலையில், இன்று புதன்கிழமை பகல் நீர் வெட்டு இடம்பெற்ற பின்னர் ஊர்வலம் தலதா மாளிகையைச் சென்றடைந்து, பின்னர் யானைகள் சகிதம் கட்டுகலை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தை வந்தடைந்தது.

அங்கு இடம்பெற்ற இந்து சமய ஆராதனைகளை அடுத்து மீண்டும் பெரஹரா ஊர்வலம் ஸ்ரீ தலதா மாளிகையை சென்றடைந்தது. ஆயிரக்கணக்கான இந்துக்களின் காவடியும் இந்து தர்ம பூஜையும் இதன்போது இடம்பெறுகின்றமை சிறப்பம்சமாகும். இன்றைய பகற்பெரஹராவில் 20 யானைகள் வரை சென்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .