2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஹெரோயின் போதை பொருட்களுடன் இருவர் கைது

Kogilavani   / 2010 நவம்பர் 16 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆஸிக்)

கண்டி பிரதேசத்தில் ஹெரொயின் போதை பொருளை விநியோகித்து வந்த இரு வியாபாரிகளை 80,000ம் மில்லி கிராம் ஹெரொயின் போதை பொருட்களுடன் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்றைய தினம் கட்டுகஸ்தோட்டை நகரில் 20,000ம்  மில்லி கிராம் ஹெரொயின் பேதைப் பொருட்களுடன் சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் பின் குறித்த நபருக்கு போதைபொருளை விநியோகம் செய்துவந்த மற்றுமொரு வியாபாரி 60,000ம் மில்லி கிராம் ஹெரொயினுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யும் போது இசந்தேக நபர்களிடம் 28,800 ரூபா பணமும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பொருப்பதிகாரி எஸ்.பீ. தியகெலினாவல தலைமையில் இடம்பெற்றுவருகின்றன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X