2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தோட்டத் தொழிலாளர்களை நினைவு கூரும் நிகழ்வு

George   / 2016 டிசெம்பர் 15 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச தேயிலை தினம், எதிர்வரும் 15ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்தத் தினத்தில் போற்றப்படவேண்டியவர்கள், தேநீர் சுவைக்காக வாழ்க்கையின் பல சுவைகளை அறியாத பெருந்தோட்டத் தொழிலாளர் வர்க்கமே.

எனவே, அவர்களை கௌரவிக்கும் முகமாகவும், இதுவரை காலமும் அவர்களுக்காக உயிர்நீத்த தோட்ட தொழிலாள வீரர்களை நினைவு கூரும் நிகழ்வு கொழும்பில் இடம்பெறவுள்ளது.

நாளை காலை, காலை 11.30 மணிக்கு கொழும்பு ஐந்துலாம்பு சந்தியில் இடம்பெறும் இந்நிகழ்வுக்கு அனைவரையும் வந்து கலந்துக்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மலையக சமூக ஆய்வு மையம் மற்றும் மலையக தமிழ் இளம் தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கம் ஆகிய இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .