2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சீருடையை வழங்கி கொள்ளைக்கு உதவிய கான்ஸ்டபிள் கைது

Super User   / 2011 ஜனவரி 25 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தனது சீருடையை வழங்கி, கொள்ளைச் சம்பவமொன்றுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அங்குலான பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி சீருடையுடன் அங்குலானையை சேர்ந்த நபர் ஒருவர் அப்பகுதியிலுள்ள கடையொன்றில் கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது.  இது தொடர்பாக கல்கிஸை பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து மேற்படி நபரும் பொலிஸ் கான்ஸடபிளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வுpசாரணைகளின் பின்னர் இவ்விருவரும் கல்கிஸை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்படுவர் என  சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். (ஆனந்த வீரசூரிய)
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .