2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

துப்பாக்கிப் பிரயோகத்தால் முன்னாள் எம்.பி. பாரத லக்ஷ்மன் உட்பட மூவர் உயிரிழப்பு; துமிந்தவுக்கு சத்தி

Super User   / 2011 ஒக்டோபர் 08 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொலன்னாவையில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக  சம்பவத்தில் காயமடைந்த கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவும்  மேலும் இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தில் காயமடைந்த கொழும்பு மாவட்ட   நாடாளுமன்ற துமிந்த சில்வா உட்பட பலர் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தலையில் காயமடைந்த நிலையில் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவுக்கு அவசர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.


You May Also Like

  Comments - 0

  • jega Saturday, 08 October 2011 11:47 PM

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

    Reply : 0       0

    neethan Sunday, 09 October 2011 12:39 AM

    ஜனநாயக தேர்தல் முறையில், மூன்று உயிர்கள் காவு கொல்லப்பட்டுள்ளதை எவ்வகை ஜனநாயகமாக கொள்ளலாம்?

    Reply : 0       0

    Mujeeb Sunday, 09 October 2011 02:12 AM

    இதெல்லாம் இலங்கைத் தேர்தலில் சகஜம். ஆனால் இங்க ஜனநாயகத் தேர்தலாம். நம்பத்தானே வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X