2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Super User   / 2012 நவம்பர் 20 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

50,000 ரூபா பெறுமதியான மூன்று கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு, ஏத்துக்கால சுற்றுலாத்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அத்துல கமகே தெரிவித்தார்.

போதைப்பொருள் விற்பனை செய்தமை தொடர்பாக நீதிமன்றத்தால் ஏற்கனவே தண்டனை விதிக்கப்பட்ட நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த சந்தேகநபர் மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையம் ஒன்றை நடத்திவரும் போர்வையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் நீர்கொழும்பு, ஏத்துக்கால சுற்றுலாத்துறை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .