2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

லொறி மோதியதில் பெண் உயிரிழப்பு

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு, பிடிபன - பசியவத்த வீதியில் தெபேராம பகுதியில் பயணித்த லொறி, நேற்று செவ்வாய்க்கிழமை (11) இரவு 7.15 மணியளவில் பாதையில் சென்றுகொண்டிருந்த பெண்ணின் மீது மேதியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார் என நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்விபத்தில் படுகாயமடைந்த 55 வயதுடைய குறித்த பெண், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் சடலம், நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்விபத்துக்கு காரணமாக இருந்த லொறியின் சாரதியை கைது செய்துள்ள நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .