2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் 5 வாகனங்கள் சேதம்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று வியாழக்கிழமை (20)  5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கெலனிகம மற்றும் தொடங்கொட ஆகிய பிரதேசங்களுக்கு இடையிலான  28.9 கிலோமீற்றர் மைல்கல்லுக்கு அருகாமையில் வைத்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இதில் உயிராபத்து எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .