2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஆஸியிலிருந்து நாடு கடத்தப்பட்ட 87பேர் பிணையில் விடுதலை

Menaka Mookandi   / 2012 நவம்பர் 15 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்றபோது அங்கிருந்து விசேட விமானம் மூலமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 87பேரை நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.எம்.என்.பி.அமரசிங்க இன்று வியாழக்கிழமை தலா ஐந்து இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

அத்துடன், இவர்களுடன் ஆஜர் செய்யப்பட்ட இருவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சட்டவிரோத ஆட்கடத்தலுக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் இருவரே தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவர்களாவர்.

இந்த 87 பேரும் ஐந்து படகுகளில் புகலிடம் கோரி சென்று அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்களாவர். பிணை வழங்கப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்தவர்களாவர்.

இந்த வழக்கு அடுத்த வருடம் பெப்பரவரி மாதம் 21ஆம் திகதி மீண்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X