2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சுகாதாரத்துக்கு பங்கம்

Editorial   / 2017 ஜூலை 23 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீ.எம். முக்தார்

பேருவளை பிரதேச சபைக்குட்பட்ட ஹேன - மரக்கலாவத்த வீதியில், வயல் காணியுள்ள பிரதேசத்தில் குப்பைகள் பாரியளவில் வீசப்பட்டுள்ளதால், பிரதேசத்தில் சுகாதாரத்துக்கும் சுற்றாடலுக்கும் பங்கம் ஏற்பட்டுள்ளதாக, பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்

பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன்கள், உபகரணங்களின் கழிவுப் பொருட்கள் இவ்வாறு வீசப்பட்டுள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.

குப்பைகள் அழுகித் துர்நாற்றம் வீசுவதால், பிரதேசவாசிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பேருவளை பிரதேச சபையால், வாரத்துக்கு ஒரு முறையே குப்பைகள் எடுத்துச் செல்லப்படுவதாக, இப்பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டினர். 

வீடுகளில் தினமும் சேரும் குப்பைகளை, ஒரு வாரத்துக்கு வீடுகளில் வைத்துக்கொள்ள வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பிரதேசவாசிகள் கவலை தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .