2024 மார்ச் 28, வியாழக்கிழமை

புறக்கோட்டையில் சில பகுதிகள் திறக்கப்படாது

R.Maheshwary   / 2020 நவம்பர் 29 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

புறக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் நாளை காலை 5 மணி முதல் திறக்கபட்டாலும் சில பகுதிகளுக்கான முடக்கம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மெனிங் சந்தை, 4ஆம் மற்றும் 5ஆம் குறுக்கு தெருக்கள் நாளை காலை திறக்கப்படாதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மெனிங் சந்தை, 4ஆம் மற்றும் 5ஆம் குறுக்கு தெருக்களில் பணியாற்றுபவர்களுள் அதிகமானோர் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ள, கொழும்பு வடக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கொழும்பு வடக்கில் தொடர்ந்தும் புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X