2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

கொழும்பு – கண்டி அதிசொகுசு ரயில் சேவை ஆரம்பம்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 07 , பி.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட்ஆஸிக்)

 

இரு தனியார் நிறுவனங்கள் அரச புகையிரத திணைக்களத்துடன் இனைந்து நடாத்தும் அதி சொகுவாய்ந்த கொழும்பு – கண்டி புகையிரத சேவை நேற்று ஆரம்பிக்கப்பட்டன.
எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் மட்டும் ராஜதானி எக்ஸ்பிரஸ் என்ற தனியார் நிறுவனம் இரண்டும் இச்சேவையை நடத்துகின்றன.

அதி சொகுசுவாய்ந்த இப்புகையிரத சேவை, காலை 7.20 க்கும் மாலை 3.15 க்கும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புரப்படும் என புகையிரத நிலையம் அறிவித்துள்ளது.

அனைத்து அதி சொகுசு வசதிகளுடனான இப்புகையிரம் குளிரூட்டப்பட்டுள்ளதுடன் அனைத்து வசதிகளுடன் கூடிய இதற்கான கட்டணம் எக்ஸ்போ லங்கா ஹோல்டிங்ஸ் நிறுவனம் 1200 ரூபாவும் ராஜதானி எக்ஸ்பிரஸ் நிறுவனம் 800 ரூபாவும் அறவிடுவதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .