2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இந்திய மீனவர்கள் நால்வர் கைது

George   / 2016 மார்ச் 10 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

'இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தார்கள் என்றக் குற்றச்சாட்டில் காரைநகருக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து, 4 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று வியாழக்கிழமை (10) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்' என யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்திய, தமிழக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இந்த மீனவர்கள் படகொன்றில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோதே கைது செய்யப்பட்டனர்.

கடற்படையினரிடமிருந்து இவர்களை பொறுப்பேற்ற நீரியல் வளத்துறை அதிகாரிகள், மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .