2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிணற்றில் விழுந்த சிறுவன் பலி

Editorial   / 2020 ஜனவரி 08 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எம்.றொசாந்த்

நாவற்குழி பகுதியில், நேற்று (07) மாலை,  பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்த 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன், சசிதரன் எட்வேட் சாமுவேல் (வயது 7) என, அடையாளங்காணப்பட்டுள்ளாரென, நாவற்குழி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை, விளையாடிக்கொண்டிருந்த குறித்த சிறுவன், அருகில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்துள்ளார்.

இவ்வாறு தவறிவிழுந்த சிறுவனை மீட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .