2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கிந்துப்பிட்டி மயானத்தில் பதற்றம்

Editorial   / 2020 பெப்ரவரி 27 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

புத்தூர் மேற்கு - சிறுப்பிட்டி, கலைமதி கிந்துப்பிட்டி மயானத்தில், இன்று (27) சடலமொன்றைத் தகனம் செய்வதற்கு முயற்சித்த வேளை,  மயானத்தைச் சூழவுள்ள  மக்கள், மயானத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். 

இதனால், புத்தூர் மயானத்தில் சடலத்தைத் தகனம் செய்ய வந்தவர்கள், மயானத்தில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. 

இதையடுத்து, குறித்த பகுதிக்குப் பொலிஸார், சிறப்பு அதிரடிப் படையினர், இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .