Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 14 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், என் ராஜ், எம்.றொசாந்த்
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தனின் சாவகச்சேரி அலுவகத்துக்கு முன்னால் இருந்து, இன்று (14) காலை, ஆட்லறி எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில், குடிநீர் குழாய்கள் பொருத்துவதற்கு நிலத்தை தோண்டிய போதே, அங்கு ஆட்லறி எறிகணைகள் இருப்பது தெரியவந்தது.
ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், ஆட்லறி எறிகணைகளை மீட்கும் பணியை ஆரம்பித்துள்ளனர்.
அந்தக் குழியில் மேலும் பல ஆட்லறி எறிகணைகள் இருக்குமென நம்பப்படும் நிலையில், அகழ்வு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago