2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

டிப்ளோமா தர கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்

Editorial   / 2020 மார்ச் 16 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியில் க.பொ.த உயர்தர மற்றும் என்.வி.கியூ தகைமையுடைய மாணவர்களுக்கான  டிப்ளோமா தர கற்கை நெறிகளுக்கு தகைமையுடைய மாணவர்கள் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தேசிய நிதிக் கணக்கியல் டிப்ளோமா என்.வி.கியூ மட்டம் 5, மட்டம் 6 முழு நேரம் மற்றும் பகுதி நேரம், தேசிய தொலைத்தொடர்பு தொழில்நுட்ப டிப்ளோமா  என்.வி.கியூ மட்டம் 5 மற்றும் 6 முழுநேரம், தேசய கணிய அளவையியல் தொழில்நுட்ப டிப்ளோமா என்.வி.கியூ மட்டம் 5 முழுநேரம், தேசிய நிர்மாண தொழில்நுட்ப டிப்ளோமா என்.வி.கியூ மட்டம் 5 பகுதி நேரம்  ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

மேலதிக விவரங்களுக்கு, யாழ். தொழில்நுட்பக் கல்லூரியுடன் நேரடியாகவோ அல்லது 021-2222403 எனும் அலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளலாமென, பணிப்பாளர் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .