2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

George   / 2016 மே 19 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

அல்வாய் கிழக்கு, வெள்ளுர்ப் பகுதியில் வசித்த இராசநாயகம் அஜந்தன் (வயது 20) என்ற இளைஞன், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் தனது வீட்டில் இருந்தபோது நேற்று புதன்கிழமை (18) மாலை மின்சார தாக்கத்துக்கு இலக்காகியுள்ளார். 

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (19) அதிகாலை உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொலைக்காட்சிக்கு மின்சார இணைப்பு வழங்கும் போது, இவர் மீது மின்சார தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனையின் பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .