2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழ். குடாநாட்டில் மின்தடை

Editorial   / 2019 நவம்பர் 21 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில், சனிக்கிழமை (23) மின்சாரம் தடைப்படுமென, இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, காலை 08 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். இணுவில் - பாலாவோடை, சங்குவேலி - டச்சு வீதி, உடுவில் - ஆர்க் வீதி, உடுவில் மகளிர் கல்லூரிப் பிரதேசம், கரணவாய், இலகாமம், நாவலர்மடம், நெல்லியடி, கொடிகாமம் வீதி, சாமியன் அரசடி, விக்னேஸ்வரா வீதி, சம்பந்தர்கடை, கிழவித் தோட்டம், காளி  கோவிலடி, யாக்கரு, கலிகை, அரசடி, வலிக்கந்தோட்டம், துன்னாலை, தாமரைக் குளத்தடி, இந்திரம்மன் - கோவிலடி, காளிகோவிலடி, இரும்பு மதவடி, வதிரி, இரும்பு - மதவடி, சக்களாவத்தை, தேவரையாழி, மனோகரா, திக்கம், திக்கம் சித்திவிநாயகர் கோவிலடி, முடக்காடு, பொற்பதி, கோண்டாவிலின் ஒரு பகுதி, கோண்டாவில் - வோட்டர் வேர்க்ஸ், இருபாலை - நெசவு நிலையப் பிரதேசம், கோப்பாய் - இராச வீதி, இராசவீதி லைடன் பாம்  
பிரதேசம், கிருஷ்ணன் கோவில் சந்திப் பிரதேசம், திருநெல்வேலி ஒரு பகுதி, திருநெல்வேலி இராணுவ முகாம், கோப்பாய் கல்வியற் கல்லூரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தங்கு விடுதி, இராஜேஸ்வரி திருமண மண்டபம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென, அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .