2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ரௌவுடிக் கும்பலுக்கு விளக்கமறியல்

Gavitha   / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

கொக்குவில் பகுதியில் வாள்கள், பொல்லுகளுடன் கைது செய்யப்பட்ட 5 பேர் கொண்ட ரௌடிக் கும்பலை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார், செவ்வாய்க்கிழமை (29) உத்தரவிட்டார்.

கொக்குவில் சந்திப்பகுதியில் திங்கட்கிழமை (28) பிற்பகல், அடுத்தடுத்து வேகமாக சென்ற 3 மோட்டார் சைக்கிள்களை, வீதிப் போக்குவரத்தில் ஈடுபட்ட பொலிஸார் மறித்துச் சோதனை செய்தனர். இதன்போது, 3 மோட்;டார் சைக்கிள்களுக்கும் எவ்வித ஆவணங்களும் இருக்கவில்லை.

இதனையடுத்து, அந்தக் கும்பலிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டபோது, அவர்களிடமிருந்து வாள்கள், பொல்லுகள், கம்பிகள் என்பன மீட்கப்பட்டன. இதனையடுத்து, 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்தக் குழுவினர் விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர், நீதவானின் வாசஸ்தலத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இந்த ஐவரில் ஒருவர், நீதிமன்ற தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X