2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வாளை மறைத்து வைத்திருந்த இளைஞனுக்கு மறியல்

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்தக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட இளைஞன் ஒருவருக்கு, 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், நேற்று (10) உத்தரவிட்டார்.

கோப்பாய் பகுதியிலுள்ள கோவில் ஒன்றின் சூழலில் காணப்பட்ட வாள் ஒன்றை அவதானித்த சிறுவன் ஒருவன், அதை எடுத்து சுழற்றியுள்ளார்.

இந்தக் காட்சியைக் கண்ட ஒருவர், அதை தனது அலைபேசியில் காணொலியாக எடுத்து, கோப்பாய் பொலிஸாரிடம் வழங்கியுள்ளார்.

இதையடுத்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X