Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 28, வியாழக்கிழமை
Sudharshini / 2016 ஜூலை 24 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சிற்றூழியரை தாக்கி பெரும்காயம் ஏற்படுத்திய இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்;வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதிமன்ற பதில் நீதிவான் என்.தம்பிமுத்து சனிக்கிழமை (23) உத்தரவிட்டார்.
அத்துடன், அன்றையதினம் அடையாள அணிவகுப்புக்கும் உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்தார்;.
சனிக்கிழமை (23) அதிகாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர், ஆவரங்கால் மணற்றரை பகுதியில் இளைஞர்கள் சிலரை அழைத்து மதுவிருந்து ஒன்றினை வெள்ளிக்கிழமை (22) இரவு ஏற்பாடு செய்துள்ளார். இதன்போது, இளைஞர்கள் சிலருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில்; ஒருவர்; காயங்களுக்கு உள்ளான நிலையில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்;.
வைத்திய சிகிச்சையின் போது அழைத்து வந்த ஏனைய நபர்;களை வெளியில் நிற்குமாறு வைத்தியர் கூறியதுக்கு இணங்க, அங்கு கடமையில் இருந்த சிற்றூழியர்; மதுபோதையில் நின்ற ஏனைய நபர்;களை வெளியேற்ற முயற்சி செய்துள்ளார்;. மதுபோதையில் இருந்த இளைஞர்;கள், சிற்றூழியரை தூக்கி நிலத்தில் அடித்துள்ளனர்;. இச்சம்பவத்தில் சுன்னாகம் பகுதியைச் சேர்;ந்த தில்லை ரவிச்சந்திரன் (வயது 49) தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அச்சுவேலி பொலிஸார்; ஆவரங்கால் பகுதியினைச் சேர்ந்த இரு இளைஞர்;களை கைது செய்திருந்தனர்;. கைதான இருவரையுமே நீதவான் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago
8 hours ago