2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

திருட்டில் ஈடுபட்ட 05 சிறுவர்கள் கைது

Suganthini Ratnam   / 2014 மார்ச் 25 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். அச்சுவேலி வடக்குப் பகுதியிலுள்ள வீடொன்றின் கதவை உடைத்துக்கொண்டு உள்நுழைந்து அவ்வீட்டில் 05 நாட்களுக்கு  உணவு சமைத்து உட்கொண்டதுடன், வீட்டிலிருந்த இலத்திரனியல் திருடியதாகக் கூறப்படும் 05 சிறுவர்களை செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை கைதுசெய்ததாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஜெ.எ.எஸ்.என்.கே.ஜெயசிங்க தெரிவித்தார்.

அத்துடன், இவர்களிடமிருந்து திருடிய பொருட்களை கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.

அச்சுவேலியிலுள்ள பாடசாலையொன்றில்; கல்வி கற்கும் 13 வயதுடைய இருவரையும்  14 வயதுடைய இருவரையும்  17 வயதுடைய ஒருவரையுமே கைதுசெய்ததாகவும் அவர் கூறினார்.  

இலண்டனில் வசிக்கும் ஒருவரின் மேற்படி வீட்டை அவரின் உறவினர் பாதுகாத்து வருகிறார்.  இந்நிலையிலேயே மேற்படி வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு இச்சிறுவர்கள் உள்நுழைந்தனர். 

குறித்த வீட்டின் பராமரிப்பாளர் திங்கட்கிழமை (24) மேற்படி வீட்டுக்குச் சென்றபோது,  சிறுவன் ஒருவன் இருப்பதைக் கண்டு பொலிஸில் முறையிட்டார்.

இதனைத் தொடர்ந்து குறித்த சிறுவனைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டபோது, மற்றைய நால்வரையும் கைதுசெய்ததாகவும் அவர் கூறினார்.

மேற்படி சிறுவர்களை யாழ். குருநகரிலுள்ள சிறுவர் மற்றும் பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .