2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

15ஆவது ஆளுநர் மாநாடு; தலைவராக ஜீ.ஏ.சந்திரசிறி

Menaka Mookandi   / 2012 நவம்பர் 15 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத், சுமித்தி)


15 ஆவது ஆளுநர் மாநாடு இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது. யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் இன்று காலை ஆரம்பமான இந்த மாநாட்டில் இலங்கையில் உள்ள 9 மாகாணங்களின் ஆளுநர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இன்று காலை 8.30 மணிக்கு தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்வுகளுடன் ஆளுநர்கள் 9பேரும் மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு அங்கு மாகாணங்களின் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து 15ஆவது ஆளுநர் மாநாட்டை நினைவுகூரும் வகையில் அவர்களினால் மரநடுகை ஆரம்பித்துவைக்கப்பட்டதைத் தொடர்ந்து மண்டப நிகழ்வுகள் ஆரம்பமாகின.

14ஆவது ஆளுநர் மாநாட்டின் தலைவரான மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலான, 15ஆவது ஆளுநர் மாநாட்டுக்கான தலைமைப் பொறுப்புக்களை வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிரியிடம் ஒப்படைத்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X