2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

புங்குடுதீவு மின்விநியோகத்தை சீராக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சரண்யா)

புங்குடுதீவுப் பகுதிக்கான மின்விநியோகத்தைச் சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.

இதன் முதற்கட்டமாக காரைநகரிலிருந்து கடல் மார்க்கமாக புங்குடுதீவுக்கு கேபிள் இணைப்புகளைப் பொருத்தும் பணிகள் பூர்த்தியாகும் நிலையிலுள்ளதாகவும் அத்துடன், புங்குடுதீவில் புதிதாக மின்தூண்கள் நடப்பட்டு மின்கம்பிகள் இணைக்கப்பட்டு வருவதாகவும் மின்சாரசபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் புங்குடுதீவில் உள்ளவர்கள் சீரான மின்விநியோகத்தைப் பெறுவதற்கு வழியேற்பட்டுள்ளதோடு, மாணவர்களும் விவசாயிகளும் இதனால் பெரும் நன்மையடைவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .