2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மீண்டும் மூடப்பட்ட அச்சுவேலி - செல்வச்சந்நிதி வீதி

Super User   / 2010 ஓகஸ்ட் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt(ஞானசெந்தூரன்)

அச்சுவேலி-  செல்வச்சந்நிதி வீதியில் பொதுமக்கள் பயணம் செய்வதற்கு மீண்டும் அனுமதிக்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.

எனினும் வீதி மூடப்பட்டது தொடர்பாக பாதுகாப்புத் தரப்பினரால் உத்தியோகபூர்வமான அறிவிப்பு எதுவும்  விடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

கடந்த 30 வருடங்களாக மக்களின் பயன்பாட்டுக்குத் தடை செய்யப்பட்டிருந்த அச்சுவேலி  - செல்வச்சந்நிதி வீதி, தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலய கொடியேற்றத்திற்கு முன்னர் பொதுமக்களின் போக்குவரத்துக்காகத் திறந்து விடப்பட்டிருந்தது.

பகல் வேளையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் இவ்வீதியூடாகப் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

ஆயினும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்கள் இந்த வீதியால் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .