2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அனுமதி

Super User   / 2010 ஓகஸ்ட் 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

altaltபூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அனுமதி வழங்கியுள்ளார் என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பு சென்று திரும்பிய பின்னர் யாழ். பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்தே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் இவ்விடயம் குறித்து அமைச்சரிடம் கோரியிருந்தனர். இதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர், நேற்று கொழும்பு சென்ற சமயம் ஜனாதிபதியுடன் இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடினார் என்றும் ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .