2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

யாழ். குடாநாட்டில் இடம்பெறும் மின்வெட்டுக்கு முடிவு

Super User   / 2010 செப்டெம்பர் 01 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt(பாலமதி)
 

யாழ். குடநாட்டில்  பரவலாக இடம்பெற்றுவரும் மின்வெட்டுக்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் முடிவு காணப்படும் என்று இலங்கை மின்சாரசபையின் வடவலய உதவிப்பொது முகாமையாளர் எஸ். முத்துரட்ணானந்தம் தெரிவித்துள்ளார்.

நொதேர்ன்பவர் நிறுவனத்தின் இயந்திரம் பழுதடைந்தமையால் கடந்த 27ஆம் திகதி தொடக்கம் யாழ். குடாநாட்டில் அடிக்கடி மின்வெட்டு இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் குறித்த இயந்திரத்தின் திருத்தவேலைகள் நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் 5ஆம் திகதி தொடக்கம் சீரான முறையில் மின்சாரம் வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X