2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மதுபோதையில் மக்களுக்கு இடையூறு விளைவித்த நபருக்குச் சிறை

Super User   / 2010 செப்டெம்பர் 22 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சங்கவி)

மதுபோதையில் மக்களுக்கு இடையூறு
விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நபருக்கு, ஊர்காவற்றுறை பதில் நீதிபதி  6 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தார்.

இது தொடர்பாகத் தெரியவந்துள்ளதாவது:

ஊர்காவற்றுறைப் பகுதியில் மதுபோதையில் ஊர் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடமாடிய நபர் ஒருவரை ஊர்காவற்றுறைப் பொலிஸார் கைதுசெய்தனர்.

ஊர்காவற்றுறை நீதிமன்றில் இவர்மீதான வழக்குத் தாக்கலைச் பொலிஸார் மேற்கொண்டனர். வழக்கை விசாரணை செய்த ஊர்காவற்றுறை பதில் நீதிபதி  ஜே.கஜநிதிபாலன் குறித்த நபருக்கு 6 ஆயிரம் ரூபா அபராதம் விதித்ததுடன் குற்றப் பணத்தைக் கட்டத்தவறின் 3 மாதகாலத்துக்குச் சிறைத்தண்டனை அனுபவிக்குமாறும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இவர்  குற்றப் பணத்தைக் கட்டத் தவறியமையால் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .