2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யாழ். மாவட்டக் கடற்றொழிலாளருக்கு மத்திய வங்கி நிதியுதவி

Super User   / 2010 செப்டெம்பர் 22 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தாஸ்)

யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு மத்திய வங்கி கடன் உதவி வழங்க முன்வந்துள்ளதாக கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ். தர்மலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:

கடற்றொழிலாளர் “மல்ரி போட்” பயன்படுத்துவதற்கு வசதியாக இந்த உதவி வழங்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் ஒன்று கடந்த மாதம் யாழ். கிறீன் கிராஸ் ஹொட்டலில் நடைபெற்றது. இதில் கடற்றொழில் சமாசப் பிரதிநிதிகள் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் ஆகியோர் கலந்துகொண்டு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.

இதன் தொடர் நடவடிக்கையாக இன்று கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள யாழ். மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் விரைவில் இதற்கான பயனாளிகள் தெரிவு செய்யப்படுவதுடன் 2 அரச வங்கிகள் ஊடாக இந்தக் கடன் வழங்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விரைவில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .