2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உலக கை கழுவுதல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுப் பேரணி

Super User   / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

(கர்ணன்)

உலக கை கழுவுதல் தினத்தை முன்னிட்டு மக்கள் மத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இன்று வடமராட்சியில் மாணவர்களால் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலய மாணவர்கள் இப்பேரணியை நடத்தினர்.

பாடசாலை அதிபர் ச. திரவியராசா தலைமையில் பருத்தித்துறை பஸ்நிலையத்தில் பேரணி ஆரம்பமாகி பருத்தித்துறை குருமணல் கந்தசுவாமி ஆலயம் வரை சென்று பின்னர் பாடசாலையை வந்தடைந்தது.

இப்பேரணியில் வடமராட்சி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் இ.சுகுமார், பருத்தித்துறை பொலிஸ் பிரிவைச்சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான பொலிஸ் அதிகாரி நிஷாந்த, பருத்தித்துறை நகர பொதுச் சுகாதாரப் பரிசோதகர் இ.கமல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

altaltalt


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .