2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரிவில் ஆளணிப் பற்றாக்குறை

Super User   / 2010 ஒக்டோபர் 24 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாலமதி)

யாழ். போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி பிரிவுக்கு ஆளாணிப் பற்றாக்குறை நிலவுவதால் இங்கு கடமைகளை மேற்கொள்வதில் பெரும் நெருக்கடி நிலை காணப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரி கே. ரட்ணசூரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரிவில் 2 சட்ட வைத்திய அதிகாரிகள் மட்டுமே கடமையாற்றி வருகின்றனர்.

அதுமட்டுமன்றி கணினி உள்ளபோதிலும் கணினி இயக்குநர் ஒருவர் இங்கு இல்லாமை பெரும் நெருக்கடியைத் தோற்றுவிக்கின்றது. தட்டச்சாளர் ஒருவர் மட்டுமே கடமையாற்றி வருகின்றார். இதனால் தரவுகளைச் சேகரிக்க முடியாத நிலைமையும் காணப்படுகின்றது- என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .