2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காரைநகரில் கலை இலக்கியப் பெருவிழா

Super User   / 2010 நவம்பர் 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவம்)

காரைநகர் உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கலாசாரப் பேரவை நடத்தும்  கலை இலக்கியப் பெருவிழா காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி மண்டபத்தில் நாளை வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு உதவி அரசாங்க அதிபர் இ.த.ஜெயசீலன் தலைமையில் நடைபெறவுள்ளது.
 
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தமிழ் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசாவும் முதன்மை விருந்தினர்களாக இலங்கை வங்கியின் வடபிராந்திய முகாமையாளர் இ.ஸ்ரீதரன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆங்கில மொழியியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி வீரமங்கை யோகரத்தினம் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர் க.சோமசேகரம், யாழ். மாவட்ட கலாசார அலுவலர் திருமதி சு.விஜயரெத்தினம், கலாசார  அபிவிருத்தி உதவியாளர் செல்வி எஸ்.சசிகலா ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .