2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஆபாசப்படங்கள் அனுப்பிய இளைஞனுக்கு அபராதம்

Super User   / 2010 நவம்பர் 06 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(டெனியல்)

கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப் படங்களை அனுப்பிய பூநகரியைச் சேர்ந்த இளைஞனுக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் 5,000 ரூபா அபராதம் விதித்துள்ளது.

அத்துடன் ஐந்து வருடத்துக்கு ஒத்திவைத்த 6 மாத கடூழியச் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

பூநகரியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரது கையடக்க தொலைபேசியில் இருந்து ஆபாசப்படங்கள் வந்ததாகப் பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றினையடுத்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.

இவர், நீதிமன்ற விசாரணையின்போது தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X